Kart – Theory

இராசேந்திர சோழன்

Posted in Chola by Karthikeyan Sivanantham on October 1, 2018

சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார்.

சோழத்தின் தலைச்சிறந்த நாயகனாம் ராஜராஜ சோழருக்கும் கொடும்பாளூர் கோமகள் வானதிக்கும் மகனாய் ஆடித் திருவாதிரை நன்னாளில் அவதரித்தவர். அவரின் திருநட்சத்திரம் ஆடித்திருவாதிரை.

விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராசேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது.

சோழ மன்னர்களில் இராசேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர்.

சோழ குலம் அதற்கு முன் கண்டிராத ஒப்பற்ற வீரர். தந்தை சொல் தட்டாத தனயன்.

வேங்கையின் மைந்தன். எதிரிகள் சொப்பனத்தில் கண்டு அஞ்சும் சிங்கம்.

கங்கையும் கடாரமும் கொண்ட மாவீரர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சோழநாடு ஆனது இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது.

இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்.

மேலும் கங்கை வரை போரிட்டு சென்று கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய நகரத்தை உருவாக்கி திறம்பட ஆட்சி செய்தவர். அதே போல் கங்கை கொண்ட சோழீசர் ஆலயத்தையும் நிர்மாணித்தவர்.

தனது தந்தை உடையார் ஶ்ரீ ராஜராஜ தேவர் தஞ்சையில் கட்டிய பெரிய கோவில் போன்றே கங்கைகொண்ட சோழபுரத்திலும் ஓர் கோவிலை உருவாக்கியவர்.

தந்தையின் சாதனையை தான் மிஞ்சிவிட்டதாக சரித்திரம் பேசிவிட கூடாது என்பதற்காக அக்கோவிலை தஞ்சை பெரிய கோவிலை விட சிறியதாக கட்டிய ஒப்பற்ற சரித்திர நாயகர்.

கங்கை வெற்றிக்கு பின் சோழ தலைநகரை தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றியவர்.

அக்கோவிலை உருவாக்கிய தலைமை சிற்பி, சண்டேசுவர நாயனாருக்கு சிவபெருமான் அருள் புரியும் சிற்பத்தில் சண்டேசுவர நாயனாராக இராசேந்திரரை உருவகப்படுத்தி சிற்பம் செதுக்கியுள்ளார்.

சோழகங்கம் என்ற ஏரியையும் கங்கைகொண்ட சோழபுரத்தில் உருவாக்கியவர்.

உலகின் முதல் கப்பற்படையை உருவாக்கிய சாதனை நாயகர்.

ஒப்பற்ற மன்னர் தான் கண்ட போர் அனைத்திலும் வெற்றி கொண்ட வெற்றி வீரர்.

அலைகடல் மேலே பல கலம் செலுத்தி சோழ சாம்ராஜ்ஜியத்தை நிலைநிறுத்திய சோழ தாயின் தவப்புதல்வர் இராசேந்திர சோழர்!

 

 

Leave a comment